விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com .
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com .

Sunday, 3 November 2013

airtel - now in uthukottai


HI SPEED WIRELESS BROADBAND INTERNET NOW IN UTHUKOTTAI

ஊத்துக்கோட்டையில் அதி நவீன இணைய வசதி..

m k mahal uthukottai

ஊத்துக்கோட்டையில் ஓர் புதிய உலகம் எம்.கே.மகால்

M.K . MAHAL - UTHUKOTTAI


1-11-2013 நவம்பர் மாத இதழ்

இராண்டாம் ஆண்டில் ஊத்துக்கோட்டை டைம்ஸ் இதழ்

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் விளம்பர தாரர்கள், வாசகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள், அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்..

ஊத்துக்கோட்டை வட்டாரத்தில் மாதந்தோறும் நடைபெறும் நிகழ்வுகள், சம்பவங்கள், என அனைத்தையும் ஒரே குடையின் கீழ் மக்களுக்கு அளித்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்












Wednesday, 17 July 2013

ஊத்துக்கோட்டை டைம்ஸ் - சூலை மாத இதழ்

சூலை மாத இதழ்                        
 

                                                                   
                    







Sunday, 23 June 2013

வாடகைக் கட்டடத்தில் இயங்கும் ஊத்துக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்...





குறுகலான நெருக்கடியான இடத்தில் இயங்கிவரும் ஊத்துக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு புதியக் கட்டடம் கட்டவேண்டும் என பொதுமக்களும், வழக்கறிஞர்களும் எதிர்நோக்கி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநில எல்லையில் ஊத்துக்கோட்டை நகரம் உள்ளது. ஊத்துக்கோட்டை தாலுகாவில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி, எல்லாபுரம் ஒன்றியம், பூண்டி ஒன்றியத்தின் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மேலும் இங்கு ஊத்துக்கோட்டை, பென்னலூர்பேட்டை, பெரியபாளையம், வெங்கல், ஆரணி ஆகிய காவல் நிலையங்களில் பதிவாகும் வழக்குகள் ஊத்துக்கோட்டை நீதிமன்ற எல்லையில்தான் வருகின்றன.
ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள குறுகலான இடத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 6 ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், காவலர்கள், பொதுமக்கள் தங்கள் பணிக்காக வந்து செல்கின்றனர்.
தனியார் கட்டடத்துக்கு மட்டும் வாடகையாக ரூ.20 ஆயிரத்துக்கு மேல் செலுத்தப்படுகிறது.
போதிய வசதி இல்லாத குறுகலான இடத்தில் நீதிமன்றம் இயங்கிவருவதால் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்படைகின்றனர்.
ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகிலேயே அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
அங்கு ஊத்துக்கோட்டை நீதிமன்றத்துக்கு என சொந்தக் கட்டடம் கட்டினால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டலாம். மேலும் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் மிகுந்த பயன்பெறுவர்.
மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஊத்துக்கோட்டையில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வழக்கறிஞர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Thursday, 28 February 2013

dmk & hotel advertisement















1-3-2013 மாத இதழ்

1-3-2013 மாத இதழ்


மக்களின் பேராதரவோடு

 எட்டுபக்கங்களில் வெளியாகியுள்ளது என்பதை 

மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்..








1-2-13 advertisement

1-2-2013  இதழ்  










1-2-2013 மாத இதழ்

1-2-2013 மாத இதழ்


மக்களின் பேராதரவோடு வெளியாகியுள்ளது என்பதை 

மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்..






Monday, 18 February 2013

பேருந்துகள், நேருக்கு நேர் மோதி விபத்து ..




18--2-2013

ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநில அரசு பேருந்துகள், நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், மூன்று டிரைவர்கள் உட்பட, 40 பயணிகள், படுகாயம் அடைந்தனர்.

திருப்பதியில் இருந்து, புத்தூர், ஊத்துக்கோட்டை வழியாக, சென்னை செல்வதற்கு, ஆந்திர மாநில அரசு பேருந்து, (ஏபி29 இசட் 3325), நேற்று அதிகாலை புறப்பட்டது. பேருந்தை நின்றரை மண்டலம் எம்.ஜி. கண்டிகையைச் சேர்ந்த, சிவய்யா மகன் அரிபாபு, 36 என்பவர் ஓட்டினார். அதே நேரத்தில், சென்னையில் இருந்து, ஊத்துக்கோட்டை வழியாக, கடப்பா வரை செல்லும், மற்றொரு ஆந்திர மாநில அரசு பேருந்தும் (ஏபி29 இசட் 0790), நேற்று புறப்பட்டது. இந்த பேருந்தை ஓட்டுனர் சீனிவாசலு, 40, ஓட்டி வந்தார். அவருடன் மற்றொரு ஓட்டுனர் மூர்த்தி, 43, சுழற்சி முறையில், பேருந்தை இயக்குவதற்காக உடன் வந்தார்.

நேருக்கு நேர் மோதல்: திருப்பதி - சென்னை செல்லும் பேருந்தில், 10 பேரும், சென்னை - கடப்பா செல்லும் பேருந்தில், 30 பேரும் என, மொத்தம், 40 பேர், பயணம் செய்தனர். நேற்று காலை, 6:45 மணிக்கு, சென்னை - கடப்பா செல்லும் பேருந்து, சென்னை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் (எண்-51), பெரம்பூர்பாட்டைக்கு அருகே வந்தது. அப்போது, சாலை விரிவாக்கத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தை கவனிக்காமல் ஓட்டுனர் சீனிவாசலு பேருந்தை ஒட்டிய வந்தார். அப்போது, பள்ளத்தில் பேருந்து கவிழாமல் இருப்பதற்காக, பேருந்தை திடீரென திருப்பினார். அப்போது, திருப்பதி - சென்னை சென்ற, பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இச்சம்பவத்தில், ஓட்டுனர்கள் மூன்று பேர் உட்பட பேருந்தில் பயணம் செய்த, 40 பேரும் காயம் அடைந்தனர்.

டிரைவர்கள் மீட்பு: விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அக்கம் பக்கத்தினர் வந்து பேருந்துகளுக்கு இடையில் சிக்கி தவித்த, மூன்று டிரைவர்களை மீட்டு, சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த பயணிகள், ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.


போக்குவரத்து பாதிப்பு: இவ்விபத்து காரணமாக, காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரை, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து, ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.