தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24–ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு அங்கமாக வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகராவ் ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கார்நகரில் நேற்று மாலை தொடங்கி வைத்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 24 லட்சத்து 84 ஆயிரத்து 262 வாக்காளர்கள் உள்ளனர். வருகிற 19–ந்தேதி வரை வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி சீட்டு வழங்குவார்கள்.
ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றமாகும். ஆகையால் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரி பரந்தாமன், ஊத்துக்கோட்டை தாசில்தார் சுப்பிரமணி, துணை தாசில்தார் லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment