திருவள்ளுர் தனி தொகுதியில் அதிமுக மற்றும் திமுக விற்கு சரிவு ஏற்படுமா ?
வரும் 24.4.14 அன்று நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் திருவள்ளுர் தனி தொகுதியில் மொத்தம் 14 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 6 நபர்கள் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர்..
இதில் அ.தி.மு.க சார்பிரல் போட்டியிடும் வேட்பாளர் பெயரும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் பெயரும் பி.வேணுகோபால் என ஓரே பெயரை கொண்டிருப்பதால் அ.தி.மு.க இது அதிமுகவிற்கு பாதகமான முடிவையே ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்..
இதே போல் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் துரை.ரவிக்குமார் பெயரை கொண்ட சுயேட்சை வேட்பாளர் பெயரும் ரவிக்குமார் தான் ஆனார் இவருக்கு இனிசியல் வேறு..
தேர்தல் நேரங்களில் பெரும்பாலன நபர்கள் வேட்பாளர்களின் பெயர்களை படித்தே வாக்களிப்பதால் அதிமுக மற்றும் திமுக விற்கு சரிவு ஏற்படும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மக்களின் முடிவு என்ன காத்திருப்போம் - மே 16 வரை...
No comments:
Post a Comment