ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆகையால் கிருஷ்ணா நதி கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனந்தேரி கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரது மனைவி ஹேமலதா (45) நேற்று மதியம் கிருஷ்ணா நதி கால்வாயின் கரையில் துணி துவைத்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து விட்டார். இதனால் அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கால்வாயில் குதித்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் தியணைப்பு படையினரும் தேடினார்கள் ஆனாலும் அந்த பெண் குறித்த எந்த தடையமும் கிடைக்கவில்லை.
இதனால் அனந்தேரி கிரமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது..
No comments:
Post a Comment